Thursday, October 9, 2014

மாண்டலின் ஸ்ரீனிவாஸ்


1980 இல் கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்து முடித்த பின் ஜம்ஷெட்பூரில் டாடா நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்த நேரம். 'அய்யாக்கண்ணு மெஸ் ' என்ற எங்கள் செல்லமான தமிழ் மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, 9-10 வயதுள்ள ஒரு பையன் அப்பாவுடன் வந்து அமர்ந்தான். அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் ( பெயர் என்ன தெரியுமா? மதராஸி சம்மேளனி ! இப்போது மாற்றி விட்டார்களா தெரியவில்லை! ) அமைப்பாளர் ஒருவரும் கூட வந்தார். 'நாளைக்கு என்ன சார் கச்சேரி?' என்றேன். 'இதோ இருக்கானே இந்தத் தெலுங்குப் பையன்தான் மாண்டலின் வாசிக்கப் போகிறான்' என்றார். நான் அதற்கு முன் மாண்டலினை 'ஷோலே' படத்தில் 'மெஹ்பூபா, மெஹ்பூபா ' பாடலில் ஜலால் ஆகா வாசித்துதான் பார்த்திருக்கிறேன். அதில் கர்நாடக இசையைக் கொண்டு வர முடியும் என்பதே  எனக்குத் தெரியாது!

பின்னாளில் தன் காந்தர்வ இசையால் மகுடியில் மயங்கிய பாம்பாக ரசிகர்களை உலகெங்கும் கட்டிப் போட்ட அந்தத் 'தெலுங்குப் பையன் 'இவ்வளவு சீக்கிரம் மறைவான் (ர்) என்று கனவிலும் நினைக்கவில்லை!

என்றாவது ஒரு நாள் திரும்பி வர மாட்டாயா ஸ்ரீனிவாஸ்?

சினிமா விரும்பி  

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...