Thursday, August 18, 2016

நா. முத்துகுமார்

நா. முத்துகுமார்

நாற்பத்தோராயிரம் பாடல் எழுத வேண்டியவன் நீ!
நாற்பத்தொன்றில் அநியாயமாய்ப் போய்ச் சேர்ந்தாயே!

சினிமா விரும்பி
 

Monday, May 30, 2016

"நான் ஒரு விளையாட்டு பொம்மையா?"

"நான் ஒரு விளையாட்டு பொம்மையா?"

1985-87 இல் நான் பரீதாபாதில் பணியில் இருந்த போது மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன் மூத்த மகனுடன் என் வீட்டருகில் வசித்து வந்தார். சிறு வயதில் அயோத்யா மண்டபம் நிகழ்ச்சிகளில் அவரைப் பல முறை பார்த்ததுண்டு என்பதனால் நானே சென்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். பெரியவர்  சமீபத்தில்தான் பக்கவாதத்தால் தாக்கப்பட்டு முழு வலது புறம் செயல் இழந்து விட்டிருந்தார். பேச்சும் குழறும்.

"மாம்பலத்தில்  உங்க மாடி வீடு என்ன ஆச்சு சார்?" என்றேன். "பொண்ணுங்க கல்யாணத்துக்காக பில்டரிடம் வித்துட்டேம்பா!" என்றார். விட்டு விட்டு அவர் பேசிய வார்த்தைகளில் பெரும் ஆதங்கம் தெரிந்தது.

எங்கள் நண்பர் குழாத்தில் ஒருவன் நன்றாகப் பாடுவான். கர்நாடக இசையில் கேள்வி ஞானமும் உண்டு. "நவரச கானடாவில் வரும் பாபநாசம் சிவன் பாடலான 'நான் ஒரு விளையாட்டு பொம்மையா, ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு?" எனக்காகப் பாடுவாயா?' என்றார். நண்பனுக்கு முழு வரிகளும் தெரியாது என்றதும் "பரவாயில்லை! தெரிந்த வரை பாடு போதும்!" என்றார்.

அவன் பாடி முடிப்பதற்குள் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். அப்படி ஒரு அழுகை! அவர் அழுது முடித்த பின் நாங்கள் அமைதியாக  வெளியேறினோம்.

அடுத்த பத்து நாட்களில் பெரியவர் அந்த ஜகன் நாயகி உமையிடமே போய்ச் சேர்ந்து விட்டார் என்று தகவல் வந்தது! இசை அவரைப் பிழைக்க வைக்கா விட்டாலும் அவருடைய மன பாரத்தைப் பெருமளவு குறைத்திருக்கும் என்றே எனக்குத் தோன்றியது!
சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...