Wednesday, September 1, 2010

'பாடலுக்குப் பின்னால் ஒரு கதை'

பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன் 'துக்ளக்'கிலும் தொலைக்காட்சியிலும் கொடுத்திருந்த பேட்டிகளில் இருந்து நான் தொகுத்தது:

கவிஞர் முத்துலிங்கத்தின் மேல் அமரர் எம்.ஜி.ஆருக்கு அலாதி பிரியம். ஒரு கால கட்டத்தில் எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் இவருக்கு ஒரு பாட்டு கண்டிப்பாக உண்டு. 'மீனவ நண்பனில்' எல்லாப் பாடல்களும் எழுதப்பட்டு விட்ட நிலையில் எம்.ஜி.ஆர் தலையிட்டு ஒரு கனவுப் பாடல் முத்துலிங்கத்துக்காக introduce செய்தார். எம்.ஜி.ஆர் போனில் அழைத்த போது கவிஞர் சொன்னார் " எல்லாப் பாட்டும் எழுதி முடிச்சுட்டாங்களாமே?" எம்.ஜி.ஆரின் பதில்: " உன்னை விட்டுட்டு எப்படிய்யா அது முடியும்?!"

கவிஞர் எழுத ஆரம்பித்தார் :

"அழகுகள் உன்னிடத்தில் அடைக்கலம்;
உன் அங்கங்கள் மன்மதன் படைக்கலம் "

இயக்குனர் அமரர் ஸ்ரீதரும் இசை அமைப்பாளர் எம். எஸ். வீயும் கேட்டார்கள் "படைக்கலமா? படைக்களமா?"

கவிஞர் சொன்னார்: "கலம் என்றால் ஆயுதம்; களம் என்றால் யுத்தம் நடக்குமிடம். இரண்டும் எழுதலாம் . நான் எழுதியது படைக்கலம் ."

பிறகு யாரோ கமென்ட் அடிக்கிறார்கள்: "என்னய்யா இது அடைக்கலம் அது இது என்று; பாதிரியார் பேர் மாதிரி !"

கவிஞர் உடனே பாட்டையே மாற்றி எழுதுகிறார்:

"தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ,
நீ... மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ?!

இதைத்தான் இன்று வரை ஜேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் குரலில் நீங்களும் நானும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!

சினிமா விரும்பி

Sunday, August 29, 2010

‘DASAVATHARAM’ MOVIE REVIEW


'என்னடா அரதப் பழசான பதிவாயிருக்கிறதே!' என்று பார்க்கிறீர்களா? அது ஒன்றுமில்லை! 'தமிழ்மணம்' திரட்டியில் என் போன்ற சினிமாப் பைத்தியங்களுக்காகத் 'திரைமணம்' என்று ஒரு புதிய பகுதி தனியாக ஆரம்பித்திருப்பதால் இந்த மீள் பதிவு!

Just about everything that can be said about ‘Dasavatharam’ has been said in reviews in the net. Since I am a little (!) late, I will try to add a few of my own observations.

The first thing that struck me when I saw the film was that Kamal must have been influenced in his teens by MGR’s all time hit ‘ulagam suRRum vaaliban’ . But then ‘U Su Vaa’ had four heroines, plenty of lilting duets, many villains, Nagesh’s comedy and the breathtaking visuals of Japan (Expo 70) and the Asia Pacific, whereas the ‘non-stop –chase- within- 5 -days’ format of ‘Dasavatharam’ doesn’t permit him to have even one duet with Asin!

The first ten minutes of 12th century Rangaraja Nambi are superb! (though I doubt if Kulothunga Chola really did this cruel act). Napoleon, Asin , Kamal’s acting and dialogues, Hariharan’s voice, the lyrics by Kavignar Vaali and music - just about everything falls into place, making you long for more. Kamalji, when are you going to take up your dream project ‘ Kalki’s Ponniyin Selvan’?

After Rangaraja Nambi, the role I liked most was that of Fletcher. Anyone who is not an avid watcher of Tamil films will mistake him for a real American actor. The sheer ruthlessness of this character has to be seen to be believed! Boy! I lost count of the number of people he killed in the film!

As many have mentioned in their reviews, one does not really require all the ten avtars in the story, the most avoidable add-ons being Khalifulla Khan and George Bush. What does Khan do other than just appearing tall on screen like a circus clown on stilts? You’ll be immediately tempted to compare this with the inimitable dwarf of ‘aboorva sagotharargal’ and the disappointment will be huge. Kamal has tried to keep one tall avtar just for correlation with the mythical Trivikrama. In the process, even veterans like Nagesh and KR Vijaya have got wasted. The movie appears disjointed in places. Someone in the movie hall commented “ padam adikkadi maaRudhuppaa! reNdu mooNu vERa vERa padam paarkkaRa maadhiri irukku!”

It is difficult to imagine a Tamil film today without either of the comedians Vadivelu and Vivek. Kamal makes it up with his brilliant comedy as CBI officer Balram Naidu. On occasions, his dialogue delivery reminds you of the late Baliah. All the comic dialogues in the film (after throwing away his cellphone in somebody else’s car to avoid being tracked by the villain , Govind Kamal tells his friend ‘inimEl avanukkup pidichchudhu saniyan’; Balram Naidu comments on Khan’s height, ‘yEmpaa lighthousu! ENi maadhiri irukkiyE un pEr enna Bin Ladderaa?)’ have a solid Crazy Mohan flavour, though Kamal is credited for dialogues in the titles. Naidu’s punchline ‘When a Telugu settled in Chennai like me can speak fluent (!) Tamil, why are you, a Tanjorean , speaking stubbornly in English? This way , how do you expect Tamil to grow?’ slaps many a Tamil straight on his/ her face.

Dalit leader Vincent Bhoovaragan’s Malayalam loaded southern dialect and the revolutionary poems recited by his assistant (courtesy: Kavignar Vairamuthu??) are very authentic. The make ups of Krishnaveni paatti , Khan and to some extent Bhoovaragan are shoddy, reminding you of Ajit’s super duper flop ‘Citizen’. At times I wonder, when Kamal’s original face is totally suppressed in a mask, as in the case of the Japanese Shingen Narahashi ( a clever juggling of the name Narasimha!) where, even the eyes don’t betray Kamal, what charm is there for a diehard Kamal fan to watch the role? It is as good as performed by another artiste. During the Narahashi scenes, you get a small dose of 'Enter the Dragon' type sister sentiment! The climax fight sequence between Fletcher and Narahashi is simply mind boggling!

I think most people are being unfair to the music director Himesh Reshammiya. My rating of his song’s are: 1. Kallai mattum 2. ulaga naayaganE 3. Mukundaa, Mukundaa . Stay away from the remix number of ‘Oh! Oh! Sanam!’ sung by Himesh himself (only in the album, not picturised) if you are particular about Tamil pronunciation by singers! Background score by Devi Sri Prasad is racy, enhancing the quality of the chases by leaps and bounds. Kavignar Vaali shines in his forte of Vaishnavism in ‘Kallai mattum’ and ‘Mukundaa, Mukundaa’ while Kavignar Vairamuthu excels in ‘ulaga naayaganE’.

Normally, Sardarjis in Tamil films speak either Hindi or a funny Tamil. In Dasavatharam, for authenticity, Kamal, as the Indipop singer Avtar Singh and Jayaprada have spoken Punjabi. Thank god, he didn’t resort to his oft- repeated Madras Bhaashai this time for any of the roles! And why did Kamal have to choose the long forgotten Jayapradha when any of today’s heroines would have been an ideal match for Avtar Singh? Is it because he wanted to recreate the ‘Salangai Oli’ magic ? Asin has done a pretty decent job as the 12th century Kodhai and the effervescent Iyengar girl Aandaal from Chidambaram.

It is very thoughtful of Kamal (or the director KS Ravikumar) to have named the monkey (cute!) in the genetics laboratory as Hanu.

There is zero glamour in the film, in spite of the much hyped Mallika Sherawat. She was any day more glamorous in her earlier films!

One final sentence: Forget all the hype, forget chaos theory and butterfly effect, forget the debate on whether the film is ‘World Class’ or not- just go, enjoy the film by surrendering yourself to the entertainment that ‘ulaga nayagan’ provides you. You’ll come out appreciating his hard work and courage to experiment!

சினிமா விரும்பி

Wednesday, June 30, 2010

‘Raavan’ (Hindi) Movie Review

After all the hype, when you go with the expectation that Maniratnam is going to view ‘Ramayan’ from a totally fresh perspective , what you get is, non- stop downpour throughout the film which is irritating beyond a point. Aishwarya Roy gets kidnapped in the beginning. From then on till interval, there’s not a single inch of progress in the story. In fact, from kidnapping to interval, there is an assortment of disjointed scenes making us wonder if the editor went for a power nap! Even if the director shuffles all these scenes at random, it won’t make any difference! In the jungle, Aishwarya is sometimes tied down with a rope while on many other occasions, she is totally free! Every now and then Aishwarya and Abhishek Bachchan exchange fiery challenges. We can’t make out why Aishwarya, supposed to be a courageous lady, jumps off the cliff once. (It is another matter that she escapes death a la ‘Punnagai Mannan’ (Yesteryear Tamil superhit of K. Balachander with Kamal and Revathy)) ‘How can I shoot a woman who stands in front of me absolutely not scared of death when I point a gun at her?!’ is the logic given by Abhishek for not killing her for 14 days. No big deal! He applies on his face sometimes kajal, sometimes charcoal and sometimes pure mud and does some facial gimmicks like as ‘bak bak’. In the end when Aishwarya repeats the same ‘bak bak’ it’s a big slice of comedy! Kya zaroorat hai Mani Sir?!

Abhishek is a reasonably peace- loving common man in the flashback. What made him such a pucca jungle citizen (!) is not shown convincingly. He comes out as a forest man from Congo or something! You can infer that they have tried to portray Ram in an oblique villainous shade {Ram (Vikram in Hindi) kills by deceit Vibheeshan who volunteers for a peace talk. In the end also, the grey shade of Ram is clearly visible}. Other than this, what the director is trying to say about Sita and Raavan characters is simply not clear. He hasn’t bothered to explain it to the average viewer either. Govinda does some banana peel comedy in the name of Hanuman. They say Hanuman is supposed to be extremely intelligent. Here, they haven’t troubled Govinda with any such thing!

Not a single song is in the right slot (other than Shoorpanaka Priya Mani’s engagement song). Why a ‘Dasavataharam’ style half broken Ranganatha statue comes on screen suddenly is not known!

Locales are excellent, Camera is brilliant and they have stunned you technologically. It is a pity that there is nothing in the movie other than these. If you ask me whether I liked anything at all in a film of such epic proportions, I’ll only say I liked the name given to Sita by Manitatnam very much…. ‘Raagini’

Cinema Virumbi

Friday, June 25, 2010

'ராவண்' (ஹிந்தி) திரை விமர்சனம்

'மணிரத்னம் ராமாயணத்தைக் கொஞ்சம் மாறுபட்ட கோணத்திலிருந்து பார்க்கப் போகிறார் போல' என்று ஆவலோடு போய் உட்கார்ந்தால்.......படம் முழுவதும் தேவையே இல்லாமல் எரிச்சலூட்டும் அளவுக்குக் கொட்டும் மழை. படத்தின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் கடத்தப் படுகிறார். அதன் பிறகு இடைவேளை வரையில் கதையில் ஒரு 'இன்ச்' கூட முன்னேற்றம் கிடையாது. சொல்லப் போனால் கடத்தலுக்குப் பிறகு இடைவேளை வரை துண்டு துண்டான காட்சிகள் , எடிட்டர் தூங்கி விட்டாரோ என்று நினைக்கத் தோன்றுமளவுக்கு! இயக்குனர் இவற்றை எப்படிக் குலுக்கிப் போட்டாலும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. காட்டுக்குள் சில சமயம் ஐஸ்வர்யாவைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். சில சமயம் டோட்டலி ப்ரீ! அடிக்கடி ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் ஆவேசமாக சவால் விட்டுக் கொள்கிறார்கள். மிகுந்த தைரியசாலியான ஐஸ்வர்யா எதற்காக ஆரம்பத்தில் ஒரு முறை மலை மேலிருந்து குதிக்கிறார் என்று தெரியவில்லை. (பிறகு 'புன்னகை மன்னன்' பாணியில் உயிர் தப்புகிறார் என்பது வேறு விஷயம்!) 'நான் துப்பாக்கியை நீட்டும் போது சாவைப் பற்றி இம்மியளவு கூட பயம் இல்லாமல் தைரியமாக என் எதிரே நிற்கும் இந்தப் பெண்ணை நான் எப்படி சுடுவது?' என்கிறார் அபிஷேக். இது ஒன்றும் கம்ப சூத்திர லாஜிக்காகத் தெரியவில்லை! முகத்தில் சில சமயம் மை+ கரி, சில சமயம் சேறு பூசிக் கொண்டு அவ்வப்போது 'பக் பக்' என்பது போன்ற பல முக சேஷ்டைகளைச் செய்கிறார். கடைசியில் ஐஸ்வர்யா அதே 'பக் பக்'கைத் திரும்பச் செய்வது பெரிய காமெடி பீஸ் ! தேவைதானா மணி சார்?!

பிளாஷ் பேக்கில் ஓரளவு அமைதியான, சாதாரணக் குடிமகனான அபிஷேக் திடீரென்று பக்கா காட்டுவாசியானது எப்படி என்று பெரிதாக விளக்கம் எதுவும் இல்லை. ஏதோ காங்கோ நாட்டு வனவாசி போல் செய்திருக்கிறார்கள்! ராமன் கேரக்டரை (ஹிந்தியில் விக்ரம்) ஓரளவு வில்லனாகக் காட்ட முயல்வது தெரிகிறது (அமைதித் தூது பேச வந்த விபீஷணனை சுட்டுக் கொல்கிறார் விக்ரம்;படத்தின் முடிவிலும் அவரிடம் வில்லன் சாயல் தாராளமாகவே தெரிகிறது ). மற்றபடி ராவணன் மற்றும் சீதை கேரக்டர்களைப் பற்றி என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் என்று சுத்தமாகப் புரியவில்லை. அவரும் மக்களுக்குப் புரிய வேண்டுமே என்று பெரிதாக மெனக்கெடவில்லை. அனுமன் வேடத்தில் கோவிந்தா செய்வது 'கெக்கே பிக்கே' காமெடி. அனுமனுக்கு நல்ல புத்திக் கூர்மை உண்டு என்பார்கள்; இதில் கோவிந்தாவுக்கு அப்படி எல்லாம் ஒன்றும் சிரமம் கொடுக்கவில்லை!

பாடல்களில் ஒன்று கூடப் பொருத்தமான இடத்தில் இல்லை (பிரியா மணியின் திருமணக் கொண்டாட்டப் பாடலைத் தவிர) .படத்தின் நடுவே வரும் பாதி உடைந்த (தசாவதாரத்தில் வருவது போன்ற) ரங்கநாதர் சிலை எதற்கென்றே தெரியவில்லை!

லொகேஷன் அற்புதம், கேமரா தத்ரூபம், டெக்னிகலாக பிரம்மாண்டமாக மிரட்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர படத்தில் ஒன்றுமே இல்லை என்பதுதான் மிக வருத்தமான உண்மை.இவ்வளவு பிரம்மாண்டமான படத்தில் மனத்தைக் கவர்ந்த விஷயம் எதுவுமே இல்லையா என்றால், சீதை கேரக்டருக்கு மணிரத்தினம் வைத்த பெயர் 'ராகினி' எனக்கு மிகவும் பிடித்தது!

சினிமா விரும்பி

Monday, June 14, 2010

கண்ணீரா? தங்கமா?

2007 இல் http://payananggal.blogspot.com இன் திரு வாஞ்சிநாதனும்
அதற்கு முன்பே http://forumhub.com இல் திரு அருளரசனும் வெண்பா
முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் .

அவர்களிடமிருந்து நான் எடுத்துக் கொண்ட ஆங்கில மூலம் கீழே :

If it were possible to heal sorrow by weeping and to raise the dead
with tears,
gold were less prized than grief.
----Sophocles

நான் செய்த தமிழாக்கம் (சத்தியமாக வெண்பா அல்ல!) இதோ:

கண்ணீரா? தங்கமா?


அழுது புரண்டா துக்கம் தீர்ந்திடுமா?
கண்ணால ஜலம் விட்டாப் போதும்;
செத்தவன் எழுந்திடுவான்னா,
தங்கம் ஏன்யா வாங்குற?
லிட்டர் கணக்காக் கண்ணீர் வாங்கிப் போடு!


சினிமா விரும்பி

Sunday, May 30, 2010

'மதமா, மரமா?'- சென்னை ஆட்டோக்களில் போதனை

சமீபத்தில் சில நாட்கள் சென்னை செல்ல நேர்ந்தது. ஓரிரு ஆட்டோக்களின் பின்னால்
" மதம் வளர்க்காமல் மரம் வளர்ப்போம்' என்ற போதனை வாசகம் காணப் பட்டது. மதத்தைப் பற்றி யார் வாய் திறந்தாலும் உடனே நாசி துவாரங்கள் புடைத்து விடும் பெரிய மதாபிமானி நான் இல்லைதான். இருந்தாலும் இது எனக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாத அபத்தக் களஞ்சியமாகத் தோன்றுகிறது. இதையே சற்று மாற்றி
" மத வெறி தவிர்ப்போம்; மரங்கள் வளர்ப்போம்"
என்று எழுதினால் அழகுணர்வோடு பலருக்கும் ஏற்புடையதாகவும் இருக்குமே?!

சினிமா விரும்பி

Tuesday, April 6, 2010

பார்த்திபனின் 'குடைக்குள் மழை' யும் 'Karthik Calling Karthik 'கும்

பார்த்திபனின் 'குடைக்குள் மழை' நினைவிருக்கிறதா? (கார்த்திக்
ராஜாவின் மனதை வருடும் இசையை மறக்க முடியுமா?) இடைவேளையின்
போது தன் கூடப் பிறந்தவன் என்று அதிரடியான இன்னொரு பார்த்திபனை
அறிமுகப் படுத்துவார். அவர் செய்யும் லொள்ளு தாங்க முடியாது! படம் முடியும்
போதுதான் தெரியும், தன் அடி மனதில் உள்ள கெட்ட எண்ணங்களுக்கெல்லாம்
ஒரு உருவம் கொடுத்து, இல்லாத ஒரு கூடப் பிறந்தவனைத் தானே உருவாக்கி,
அவனைக் கொலையும் செய்து விட்டதாக பிரமையில் வாழ்வார். கிளைமாக்சில்
டாக்டர் ருத்ரன் நமக்கு எல்லாவற்றையும் விளக்குவார்.

முழுமையாக இல்லா விட்டாலும் இந்த knot சமீபத்தில் வெளி வந்த பர்ஹான்
அக்தரின் 'Karthik Calling Karthik' ஹிந்திப் படத்தில் எடுத்தாளப் பட்டுள்ளது. சிறு
வயதில் தன்னை எப்போதும் மிரட்டி உருட்டி வந்த அண்ணனைத் தான்
அப்போதே கொன்று விட்டதாகக் குற்ற உணர்வில் வாழ்கிறார். கிட்டத் தட்ட
கடைசியில்தான் தெரிகிறது, அவருக்கு சகோதரனே கிடையாது என்று! நடிகர்/
தயாரிப்பாளர் பர்ஹான் அக்தரோ அல்லது கதாசிரியர்/ இயக்குனர் விஜய்
லால்வானியோ நம்ப ஊர்ப் படத்தைப் பார்த்திருக்க வேண்டும்! அல்லது
எல்லோருமே ஓரிரு ஆங்கிலப் படத்திலிருந்து ஐடியா எடுத்தார்களோ
தெரியவில்லை! ஹிந்திப் படத்தில் தீபிகா படுகோனும் உண்டு ; இசை ஷங்கர்
எஹ்சான் லோய். ஒரு நடை போய்த்தான் பாருங்களேன்!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...