இந்த வார அலப்பரை 3! (நோக்கு வர்மம்)
நான் இது வரை 'ஏழாம் அறிவு ' பார்க்கவில்லை. அந்தப் படத்தில் 'ஹிப்னாடிஸம்' என்பது 'நோக்கு வர்மம்' எனப்படும் பழந்தமிழர் கலை என்று காட்டியிருப்பதாகப் படித்தேன். எனக்கென்னவோ ஆதிகாலத்தில் தமிழ் பிராமணர்கள்தான் இந்த நோக்கு வர்மத்தைக் கண்டு பிடித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது! ஏனென்றால் அவர்கள்தான் வீட்டில் 'நோக்கு, நேக்கு' என்று பேசிக் கொண்டிருப்பார்கள்! இது எப்படி இருக்கு?
சினிமா விரும்பி
Tamil gossip assured! May stumble upon some quality writing occasionally! ஊர் வம்பு நிச்சயம் உண்டு! சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு!
Saturday, November 12, 2011
Monday, November 7, 2011
'ரா ஒன்' (ஹிந்தி) திரை விமர்சனம்

ஒரு நல்ல திறமை வாய்ந்த இயக்குனர் ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் காட்டுகிறது. தமிழ் ' எந்திரனோடு ' ஒப்பிட்டே தீர வேண்டும். அங்கு மூன்று ரஜினி (விஞ்ஞானி வசீகரன், நல்ல சிட்டி, வில்லன் சிட்டி Ver 2.0) கேரக்டர்களும் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தார்கள். துவக்கத்தில் சிட்டி செய்யும் காமெடிகளும் பார்த்துப் பார்த்து செய்யப் பட்டிருந்தன. இங்கே அப்படி அல்ல. ஆரம்பக் காட்சிகளில் சேகர் சுப்ரமணியம் ஷாருக் கான் (சேகர் என்ற பெயர் ஷாருக் கானுக்கு மிகவும் பிடிக்கும் போல! நினைவிருக்கிறதா அந்த காலத்து தூர்தர்ஷனில் 'சர்க்கஸ்' சீரியலில் சேகரன் என்ற பெயரில் முதலாளியின் மகனாக வந்தது அவரேதான்!) ஏதோ 'மிஸ்டர் பீன்' போலத் தடுக்கி விழும் காமெடி நிறைய செய்கிறார் . பின்னணியில் ' பைத்தியக்காரா! பைத்தியக்காரா! பைத்தியக்காரா!' என்ற காமெடி மியூசிக் ஒலிக்கிறது. நூடில்ஸில் தயிரைக் கலந்து கையால் ஒரு வெட்டு வெட்டுகிறார். நான்கு ஆண்டுகள் முன்பு வெளி வந்த 'ஓம் ஷாந்தி ஓம்' இல் ஷாருக் ஒரு காட்சியில் தமிழ்ப் பட நடிகராக 'என்னடா ராஸ்கலா' என்று 'அய்யய்யோ ஜீ' தமிழ் பேசியிருப்பார். அதே போல் இங்கும் ஒன்றிரண்டு 'அய்யய்யோ ஜீ' தமிழ் வசனம் பேச முயற்சிக்கிறார். அங்கே பரவாயில்லை; இந்தப் படத்தில் ஒரு முழு தமிழ் கேரக்டருக்குத் தேவையான 'ஹோம் வொர்க்' செய்யவே இல்லை. என்னத்தைச் சொல்ல? மறைந்த காமெடி நடிகர் மெஹ்மூத், தான் ஆரம்பித்து வைத்த மதராஸி காமெடிகளின் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீராத நியூசன்சை உண்டாக்கி விட்டுப் போய் விட்டார்.
(Disclaimer: Spoilers ahead!) ஆனால் இவர் நல்ல திறமை வாய்ந்த வீடியோ கேம் டிசைனராம், 'கடைசியில் நன்மையே வெல்லும்' என்ற கொள்கையில் நம்பிக்கை உள்ளவராம்! விடியோ கேம் அடிமையான தன் மகன் வில்லன்களை வழிபடுகிறான் ( 'Villains are kickass!') என்பதற்காக அவனுக்காகவே ஹீரோவை விட வில்லன் பலம் வாய்ந்தவனாக அமைத்து ஒரு அட்டகாசமான விடியோ கேம் தயாரிக்கிறார். அவருடைய கேரக்டரைப் பற்றி ஒரு சரியான உருவம் நம் மனதில் பதியும் முன்னரே அவர் கொல்லப் படுகிறார்; கிட்டத்தட்ட இடைவேளை வந்து விடுகிறது. அந்த சமயத்தில் விடியோ கேமில் இருந்து உயிருடன் வெளி வந்த வில்லன் ரா. ஒன்னை (Random Access One அல்லது ராவண்) அழிப்பதற்காக சேகரின் மகன் பிரதீக் இரண்டாவது ஷாருக் கானை (Good One , ஜீ-ஒன் அல்லது ஜீவன் ) கேமிலிருந்து உயிர்ப்பிக்கிறான். இந்தச் சின்னப் பையனையும் (மும்பையில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அர்மான் வர்மா) அவன் ஹேர் ஸ்டைலையும் பார்த்தால் சிறுவன் அல்ல சிறுமி போல் இருக்கிறது! ரா. ஒன் தான் விரும்பும் வடிவம் எடுக்கக் கூடியவன் என்பதால் இடைவேளைக்கு முன் ஒரு சைனீஸ்- அமெரிக்கன் நடிகரும் (டாம் வு) முடிவில் அர்ஜுன் ராம்பாலும் அந்த கேரக்டரைச் செய்திருக்கிறார்கள். அர்ஜுன் ராம்பால் கொஞ்ச நேரமே வந்தாலும் தத்ரூபமான வில்லன்; இவர் உதிர்க்கும் ஒரு 'நச்' வசனம்: 'வருஷா வருஷம் 'ராம்லீலா' கொண்டாடி ஏண்டா ராவணனை எரிக்கறீங்க? அவன் எப்போதும் சாவதில்லை என்றுதானே?' டாம் வு பார்வையில் உக்கிரம் கொப்பளிக்கிறது; அவ்வப்போது 'ஆளவந்தான் ' கமல் போல் கழுத்தை நொடிக்கிறார் .
இடைவேளையின் போது ரொம்ப நேரம் 'பாப் கார்ன்' வாங்கப் போனால் ரஜினி வரும் காட்சியை மிஸ் பண்ண வேண்டியதுதான்! சொல்லப் போனால் வலியத் திணிக்கப் பட்ட இந்தக் காட்சி ஒட்டவே இல்லை என்பது ஒரு புறம் இருக்க ரஜினி ரொம்ப வயதானவராகவும் களைப்பாகவும் தெரிகிறார். அவருடைய தீவிர ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றம்தான்! ரஜினி சார், 'ராணா' வோ 'கோச்சடையானோ' எப்போ ரிலீஸ்?
இடைவேளைக்குப் பிறகு படம் திடீரென்று சூடு பிடிக்கிறது! பொதுவாக கதை மும்பையிலிருந்து லண்டனுக்கு நகரும். இங்கு கதை லண்டனிலிருந்து மும்பைக்கு நகர, உடனே அசுர வேக 'சேஸ்' காட்சிகளுடன் ஒரு non- stop roller coaster ride தான்! இந்தப் பகுதியில் (ஏன் மொத்தப் படத்திலுமே!) முக்கியமானவை இரண்டு விஷயங்கள்தான்; செனிகலீஸ்- அமெரிக்கன் பாடகர் அகான் பாடியிருக்கும் 'சம்மக் சல்லோ ' பாடல் 'refreshingly different'. படத்தில் பார்ப்பதற்கும் ஒரு விஷுவல் ட்ரீட்! இவருடன் தமிழ் மற்றும் இந்தியில் சில வரிகளைப் பாடியிருப்பவர் ஹம்சிகா ஐயர். ரசிக்கக் கூடிய தமிழ் வரிகள் (எழுதியவர் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்) :
'என்னைத் தொட்டு என்னுள்ளத்தை நொறுக்க மாட்டியோ?
என்னைப் போலப் பெண்ணைப் பார்த்து மயங்க மாட்டியோ?
கண்ணில் கண்ணைப் பூட்டி விட்டால் சிரிக்க மாட்டியோ?
என்னில் உன்னைச் சூட்டி விட்டால் ஒட்டிக்க மாட்டியோ?'
இந்தக் காட்சியில் சிவப்பு டிரெஸ்சில் கரீனா கபூர் மிகவும் குளுமை! (ஒரு கொசுறு தகவல் - பல படங்களுக்குப் பிறகு இப்போதுதான் சேலையில் தோன்றுகிறாராம். சைஸ் ஸீரோவை எல்லாம் மூட்டை கட்டியாச்சாம்மா Bebo?!) மற்ற நேரங்களில் சுமாராக நடிக்கவும் செய்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை; கணவன் இறந்த பின் இவரது மகன் பிரதீக் ஜீவன் ஷாருக்கை நண்பனாக முழுமையாக ஏற்றுக் கொண்டு விட, இவர் ஜீவனை ஏற்கிறாரா இல்லையா என்ற குழப்பம் கரீனாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் இருக்கிறது, ஏன், இயக்குனருக்கே படம் முடியும் வரை இருக்கிறது!
அடுத்தது க்ளைமாக்ஸ்! 'எந்திரனை'ப் போலவே எடுக்கப் பட்ட எலெக்ட்ரிக் ட்ரெயின் காட்சியில் 'எந்திரனை' விட சூடு பறக்கிறது! கடைசியில் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் தூள் தூளாக இடிந்து விழும் காட்சியில் கிராபிக்ஸ் அசாத்திய மிரட்டல்! ஆனால் இவற்றைத் தவிர செலவழித்த கோடிகளுக்கு ஏற்ற கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இல்லை. 'எந்திரனில்' பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டிருந்த அழகான சின்னச் சின்ன கிராபிக்ஸ் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒரு காட்சியில் ஜீவன் ஷாருக்கின் மூக்கிலிருந்து ஏதோ நீல நிற வயர் வெளி வர, கரீனா அதைப் பார்த்து அதிர்ச்சி அடைய , ஷாருக் பொறுமையாக முழு வயரையும் எடுத்து வெளியே எறிகிறார். டைரக்டர் சார், எங்க ஊர் வடிவேலு சொல்வது போல் 'சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு?'
பட ஆரம்பத்தில் வரும் 'கல்நாயக்' சஞ்சய் தத் , 'தேசி கேர்ள்' பிரியங்கா சோப்ரா விடியோ கேம் காட்சியைக் குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் ரசிக்கிறார்கள்.(ஹிஹி , நானும்தான்!) ஹிந்தியில் மிக விரசமான அர்த்தம் தரும் ' இஸ்கீ லீ', உஸ்கீ லீ ' ,'சப்கீ லீ' என்ற பெயர்களை மூன்று சைனீஸ் விடியோ கேம் பெண்களுக்கு வைத்திருக்கிறார்கள்; இவர்கள் மூவரும் ப்ரூஸ் லீயின் சகோதரிகளாம்! 'கொஞ்சம் கொஞ்சம்' என்பதை 'காண்டோம் காண்டோம் ' என்று அபத்தமாகக் காமெடி செய்ய முயன்றிருக்கிறார்கள்! பத்து நிமிடமே திரையில் வந்தாலும் டாக்சி டிரைவர் சுரேஷ் மேனனின் காமெடி அதகளம்!
படத்தில் இடையிடையே ஷாருக் கானின் குழந்தை ரசிகர்களுக்காக அட்வைஸ், 'வீட்டில் இந்த ஸ்டண்டை எல்லாம் முயற்சிக்காதீர்கள்' என்று! நடுவே ஒரு காட்சியில் சிகரெட் பிடிப்பதற்கு எதிராகவும் ஒரு அட்வைஸ்! எப்படி? ஷாருக் கான் சிறுவனிடம் கேட்கிறார் ' ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கானோர் சிகரெட் பிடிப்பதை விட்டு ஒழிக்கிறார்கள்; எப்படி தெரியுமா?' பையன்- 'எப்படி? பேக்கட்டின் மேல் உள்ள எச்சரிக்கையைப் படித்து விட்டா? ' ஷாருக்-'இல்லை! தாங்களே செத்துப் போவதன் மூலம்!'
படம் பார்க்க வேண்டுமென்றால் '3D' இல் பாருங்கள்; 'எந்திரன்' என்று ஒரு படம் வரவேயில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்! அப்போதுதான் கொஞ்சமாவது ரசிக்கலாம்!
மொத்தத்தில் இயக்குனர் அனுபவ் சின்ஹா- 'அனுபவம் பத்தாத சின்ஹா! '
சினிமா விரும்பி
Tuesday, September 27, 2011
வாழ்க நீ எம்மான்!

சாமர்த்தியமாக, மிக சாமர்த்தியமாக ஒரு பெரிய கூட்டமே மகாத்மா காந்தியைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது வாய் கூசாமல் இழிவு செய்யவோ காத்திருக்கிறது! இன்று எனக்கு ஒரு SMS வந்தது ' எல்லோரும் காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறார்கள் ; ஆனால் பகத் சிங்கின் பிறந்த நாளை யாருமே நினைவு கூரவில்லையே! '. இது போல் எழுதுபவர்களுக்கு அப்படியொன்றும் பகத் சிங்கின் மேல் பரம அபிமானம் ஏதும் இல்லை! சந்தடி சாக்கில் காந்தியை நாலு சாத்து சாத்த முடியாதா என்று பார்க்கும் புண்ணியவான்கள்தான் இவர்கள்!
கொஞ்ச நாள் முன்னால் 'மீ நாதுராம் போல்தோய்' (நான் நாதுராம் பேசுகிறேன்) என்றொரு மராத்தி நாடகம் வந்தது. இந்த நாடகத்தில் ஏதோ ராவண வதம், சூரபத்மன் வதம் போல் 'காந்தி வதம்' என்ற சொல்லை அடிக்கடி உபயோகப் படுத்துவார்களாம்! பிறகு 'காந்தி மை பாதர்' என்று ஒரு ஹிந்திப் படம். சொல்லப் போனால் 'ஹே ராமில்' கூட இடையிடையே காந்தியை சன்னமாகக் கிண்டலடிப்பார்கள். முதல் இரவின் போது கமல் 'சத்திய சோதனை' படிக்கும் வசுந்தரா தாஸ் இடம் சொல்வார் ' எனக்குப் பாதிப் புனைகதைகளில் நம்பிக்கையில்லை!'. (I don't believe in semi fiction!) 'சத்திய சோதனை' இவர்களுக்குப் பாதிப் புனைவாம்!
இதைத் தவிர சில அறிவு ஜீவிகள் அவ்வப்போது ' இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிரிட்டிஷ்காரனே இந்தியாவை விட்டுப் போய் விடுவதாகத்தான் இருந்தான்' என்பார்கள், ஏதோ இவர்கள் போய் அவன் மனதைத் தோண்டிப் பார்த்தாற்போல! 35 ஆண்டுகளுக்குப் பிறகு 1982 இல் பாக்லாந்து போர் நடக்கும் போது இவர்கள் டீ குடிக்கப் போயிருந்தார்களோ என்னவோ!
காலம் காலமாக அவரை மகாத்மா என்றோ காந்தி அடிகள் என்றோ காந்திஜி என்றோ அண்ணல் என்றோ அழைக்காமல், வேண்டுமென்றே காந்தியார் என்று அழைப்போரும் உண்டு! (ஒரு சுவாரஸ்யமான தகவல் - அமரர் திரு.வி.க.தான் சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் போல் காந்தி அடிகள் என்ற பிரயோகத்தை உண்டாக்கினார்!). "அவரை தேசப் பிதா என்று சொல்வது தவறு, அது ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிய மரபு. அவர் இந்தியத் தாயின் தலைமகன்" என்று வாய் வக்கணை காட்டுவோரையும் பார்த்திருப்பீர்கள்!
ரொம்பவே நடுநிலையாய் காந்தியை விமர்சிக்கிறார்களாம் ! மகாத்மா காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சுகமாக அனுபவித்துக் கொண்டே அவரைத் தூற்றும் பிறவிகளை ' Time Machine' இல் பின்னோக்கிப் போய் 1947 க்கு முந்தைய அடிமை இந்தியாவில் கொண்டு போய் வீசி விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விட வேண்டும் !
'நேற்று இன்று நாளை'யில் கவிஞர் வாலி எழுதியது போல் ' இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்!'
சினிமா விரும்பி
Sunday, August 7, 2011
இந்த வார அலப்பரை 2! நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !
நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !
சமீபத்தில் இருபத்தாறாவது முறையாக நாமும் 26/11/2008 அன்று மும்பையில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அசைக்க முடியாத ஆதாரங்களை அவர்களிடமே கொடுத்திருக்கிறோம். இது வரை கொடுத்ததை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு 'ஆதாரம் பத்தாது, இன்னும் கொஞ்சம் கொடுங்கய்யா!' என்று அவர்களும் வழக்கம் போல் நம்மைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்! நாமும் இன்னும் கொஞ்சம் ஆதாரம் கிடைக்காதா என்று அரக்கப் பறக்கத் தேடிக் கொண்டிருக்கிறோம்! 'வின்னர்' படத்தில் வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது!
'நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !'
சினிமா விரும்பி
சமீபத்தில் இருபத்தாறாவது முறையாக நாமும் 26/11/2008 அன்று மும்பையில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அசைக்க முடியாத ஆதாரங்களை அவர்களிடமே கொடுத்திருக்கிறோம். இது வரை கொடுத்ததை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு 'ஆதாரம் பத்தாது, இன்னும் கொஞ்சம் கொடுங்கய்யா!' என்று அவர்களும் வழக்கம் போல் நம்மைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்! நாமும் இன்னும் கொஞ்சம் ஆதாரம் கிடைக்காதா என்று அரக்கப் பறக்கத் தேடிக் கொண்டிருக்கிறோம்! 'வின்னர்' படத்தில் வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது!
'நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !'
சினிமா விரும்பி
Thursday, June 30, 2011
இந்த வார அலப்பரை 1!
இந்த வார அலப்பரை 1:
(ஒவ்வொரு வாரமும் வரும் என்று கம்பெனி கியாரண்டி கொடுக்காது!)
1 போட்டாரய்யா MOU!
தொழிலதிபர்கள் பெரிய பெரிய தொழிற்சாலை ஆரம்பிக்க அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டுப் பார்த்ததுண்டு . ஹிந்தி நடிகர் ஓம் புரி தன் மனைவியிடம் 2008 இல் 'உடனடியாகப் பிரிய முடியாததால் இரண்டு ஆண்டுகளில் பிரிவோம், விவாகரத்து பெற்றுக் கொள்வோம்' என்று MOU போட்டிருக்கிறாராம்! அதனால் 'நான் இப்போ என்ன செய்தாலும் நீ கேட்க முடியாது' என்று வேறு பிட்டைப் போடுகிறாராம் ! வர வர எதுக்குத்தான் MOU போடுவதென்று ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சுப்பா! புரிந்துணர்வே இல்லாததற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமா?!
2 ஒரு பிரபல வார இதழில் கவர் ஸ்டோரி :
"ரஜினி திரும்ப வருகிறார்! 'ராணா'வை மீண்டும் துவக்குகிறார்! வடிவேலுவை மன்னிக்கிறார்!"
' ஏம்பா வடிவேலுவை மன்னிப்பது என்றே வைத்துக் கொண்டாலும் அதைச் செய்ய வேண்டியவர் வேறு ஒருவராச்சே?! திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டே இருந்தால் சுலபமாக எல்லோரும் இவரிடம் வாலாட்டுவார்களே?!
3 திடீரென்று பரவி விட்ட ஒரு பேஷன்!
முதலில் சில மெட்ரோக்களில் மட்டுமே தலைகாட்டி இப்போது இந்தியா முழுவதும் பரவி விட்ட ஒரு கொடுமையான பேஷன்! அலுவலகம் செல்லும் பெண்கள், சேலையோ, பேன்ட் ஷர்ட்டோ, சுடிதாரோ, சல்வார் கமீஸோ எது அணிந்திருந்தாலும், கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு துப்பட்டாவை எடுத்துக் கொண்டு முகம் முழுக்கப் பேய் மாதிரி போர்த்திக் கொண்டு, இரண்டு கண் மட்டும் தெரியும்படி டூவீலரில் போவது, அதுவும் பெரும்பாலும் Goggles போட்டுக் கண்ணையும் மறைப்பது! கேட்டால் ஹிந்தியில் சொல்வது போல் 'தூல், தூப்' (தூசி, வெயில்)பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்களாம்! பார்த்துப் போங்கம்மா! தீவிரவாதின்னு போலீஸ் புடிக்கப் போறாங்க!
சினிமா விரும்பி
(ஒவ்வொரு வாரமும் வரும் என்று கம்பெனி கியாரண்டி கொடுக்காது!)
1 போட்டாரய்யா MOU!
தொழிலதிபர்கள் பெரிய பெரிய தொழிற்சாலை ஆரம்பிக்க அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டுப் பார்த்ததுண்டு . ஹிந்தி நடிகர் ஓம் புரி தன் மனைவியிடம் 2008 இல் 'உடனடியாகப் பிரிய முடியாததால் இரண்டு ஆண்டுகளில் பிரிவோம், விவாகரத்து பெற்றுக் கொள்வோம்' என்று MOU போட்டிருக்கிறாராம்! அதனால் 'நான் இப்போ என்ன செய்தாலும் நீ கேட்க முடியாது' என்று வேறு பிட்டைப் போடுகிறாராம் ! வர வர எதுக்குத்தான் MOU போடுவதென்று ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சுப்பா! புரிந்துணர்வே இல்லாததற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமா?!
2 ஒரு பிரபல வார இதழில் கவர் ஸ்டோரி :
"ரஜினி திரும்ப வருகிறார்! 'ராணா'வை மீண்டும் துவக்குகிறார்! வடிவேலுவை மன்னிக்கிறார்!"
' ஏம்பா வடிவேலுவை மன்னிப்பது என்றே வைத்துக் கொண்டாலும் அதைச் செய்ய வேண்டியவர் வேறு ஒருவராச்சே?! திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டே இருந்தால் சுலபமாக எல்லோரும் இவரிடம் வாலாட்டுவார்களே?!
3 திடீரென்று பரவி விட்ட ஒரு பேஷன்!
முதலில் சில மெட்ரோக்களில் மட்டுமே தலைகாட்டி இப்போது இந்தியா முழுவதும் பரவி விட்ட ஒரு கொடுமையான பேஷன்! அலுவலகம் செல்லும் பெண்கள், சேலையோ, பேன்ட் ஷர்ட்டோ, சுடிதாரோ, சல்வார் கமீஸோ எது அணிந்திருந்தாலும், கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு துப்பட்டாவை எடுத்துக் கொண்டு முகம் முழுக்கப் பேய் மாதிரி போர்த்திக் கொண்டு, இரண்டு கண் மட்டும் தெரியும்படி டூவீலரில் போவது, அதுவும் பெரும்பாலும் Goggles போட்டுக் கண்ணையும் மறைப்பது! கேட்டால் ஹிந்தியில் சொல்வது போல் 'தூல், தூப்' (தூசி, வெயில்)பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்களாம்! பார்த்துப் போங்கம்மா! தீவிரவாதின்னு போலீஸ் புடிக்கப் போறாங்க!
சினிமா விரும்பி
Wednesday, December 8, 2010
வோடபோன் மற்றும் ஏர்டெல்
Monday, October 11, 2010
இந்திய நாணயத்துக்கு ஒரு சின்னம்

பொதுவாழ்வில் நாணயத்துக்கு ஒரு சின்னமாகப் பெருந்தலைவர் காமராஜ், அமரர் கக்கன் போன்றோரைச் சொல்வார்கள். இப்போது இந்திய நாணயத்துக்கே ஒரு சின்னம் வந்து விட்டது. கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் தொகை, தேசத்தின் உற்பத்தி 1.25 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள், ஒரு ட்ரில்லியனுக்கு மேல் GDP உள்ள பன்னிரண்டு நாடுகளில் ஒன்று; (பன்னிரண்டாவதுதான், இருந்தாலும் பரவாயில்லை, நூற்றுப் பன்னிரண்டு இல்லையே !) இன்றைய தேதியில் உலகின் அதிவேக வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்று எனப் பல பெருமைகள் இருக்கும் போது நம் நாணயத்துக்கென்று ஒரு சின்னம் இருப்பது முறைதானே?
இதை உருவாக்கியவர் D. உதயகுமார் என்ற ஒரு தமிழர் என்பதிலும் நமக்குப் பெருமைதான். வெறும் ஹிந்தி 'ர' வில் மேலே இரண்டு கோடுதானே போட்டார், இது என்ன பெரிய விஷயமா? மறைமுகமாக அல்ல, கிட்டத்தட்ட நேரிடையாகவே ஹிந்தியைத் திணிக்கிறார்களே (கேட்டால் அது ஹிந்தி அல்ல, தேவநாகரி என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்!) என்றெல்லாம் விமர்சனங்கள் உள்ளன. இவற்றில் ஓரளவு நியாயமும் உள்ளது. இருப்பினும், தேசத்துக்கென்று ஒரு மூவர்ணக் கொடியைப் போல், ஒரு ' ஜன கண மன ' வைப் போல், ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியைப் போல் இதுவும் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றுதான். புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டுக்களின் எண்ணிக்கையில் நாம்தான் உலகில் முதலிடம் என்று நினைக்கிறேன். (தவறாக இருந்தால் திருத்தவும்) . அந்த நோட்டுக்களில் இந்தச் சின்னம் அச்சிடப்படாது என்பது சற்றே ஏமாற்றமளிக்கிறது! (இந்தக் கட்டுரை எழுதிப் பல மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 2011 இல் ' र ' சின்னம் பதித்த இரண்டு ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வந்து விட்டன!) இது இல்லாமலே கூடக் கண்டிப்பாக இந்தச் சின்னம் உலக அளவில் விரைவில் பிரபலமாகியே தீரும். அமெரிக்கா (டாலர்), இங்கிலாந்து ( U.K பவுண்டு ) , ஜப்பான் (யென்) , ஐரோப்பிய யூனியன் (யூரோ) இவற்றுக்கு இணையாக நம் ரூபாய்க்கும் ஒரு சின்னம் வந்து விட்டது. மேலும் Rupee, ருப்பையா என்றெல்லாம் அழைக்கப்படும் நேபாளம், பாகிஸ்தான் , இலங்கை மற்றும் இந்தோனேசிய நாட்டுக் கரன்சிகளில் இருந்து நமக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கப் போகிறது. ஒரே ஒரு சிறு குறை! டாலருக்கு $ என்றும் சென்டுக்கு c இன் மேல் இரண்டு கோடு என்றும் வழங்குவது போல் நம்முடைய நயா பைசாவுக்கு ஒரு சின்னம் இல்லாமல் விட்டு விட்டார்கள்! பின்னாளில் உருவாக்குவார்களோ என்னவோ!
வரவேற்கிறோம்! வாழ்க र !
சினிமா விரும்பி
Subscribe to:
Posts (Atom)
கோமுப்பாட்டி
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...
-
பாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன்! முடிவுகள் கீழே!: தேடிச் சோறு நிதந் தின்ற...
-
After all the hype, when you go with the expectation that Maniratnam is going to view ‘Ramayan’ from a totally fresh perspective , what you...
-
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...

