இந்த வார அலப்பரை 1:
(ஒவ்வொரு வாரமும் வரும் என்று கம்பெனி கியாரண்டி கொடுக்காது!)
1 போட்டாரய்யா MOU!
தொழிலதிபர்கள் பெரிய பெரிய தொழிற்சாலை ஆரம்பிக்க அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டுப் பார்த்ததுண்டு . ஹிந்தி நடிகர் ஓம் புரி தன் மனைவியிடம் 2008 இல் 'உடனடியாகப் பிரிய முடியாததால் இரண்டு ஆண்டுகளில் பிரிவோம், விவாகரத்து பெற்றுக் கொள்வோம்' என்று MOU போட்டிருக்கிறாராம்! அதனால் 'நான் இப்போ என்ன செய்தாலும் நீ கேட்க முடியாது' என்று வேறு பிட்டைப் போடுகிறாராம் ! வர வர எதுக்குத்தான் MOU போடுவதென்று ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சுப்பா! புரிந்துணர்வே இல்லாததற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமா?!
2 ஒரு பிரபல வார இதழில் கவர் ஸ்டோரி :
"ரஜினி திரும்ப வருகிறார்! 'ராணா'வை மீண்டும் துவக்குகிறார்! வடிவேலுவை மன்னிக்கிறார்!"
' ஏம்பா வடிவேலுவை மன்னிப்பது என்றே வைத்துக் கொண்டாலும் அதைச் செய்ய வேண்டியவர் வேறு ஒருவராச்சே?! திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டே இருந்தால் சுலபமாக எல்லோரும் இவரிடம் வாலாட்டுவார்களே?!
3 திடீரென்று பரவி விட்ட ஒரு பேஷன்!
முதலில் சில மெட்ரோக்களில் மட்டுமே தலைகாட்டி இப்போது இந்தியா முழுவதும் பரவி விட்ட ஒரு கொடுமையான பேஷன்! அலுவலகம் செல்லும் பெண்கள், சேலையோ, பேன்ட் ஷர்ட்டோ, சுடிதாரோ, சல்வார் கமீஸோ எது அணிந்திருந்தாலும், கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு துப்பட்டாவை எடுத்துக் கொண்டு முகம் முழுக்கப் பேய் மாதிரி போர்த்திக் கொண்டு, இரண்டு கண் மட்டும் தெரியும்படி டூவீலரில் போவது, அதுவும் பெரும்பாலும் Goggles போட்டுக் கண்ணையும் மறைப்பது! கேட்டால் ஹிந்தியில் சொல்வது போல் 'தூல், தூப்' (தூசி, வெயில்)பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்களாம்! பார்த்துப் போங்கம்மா! தீவிரவாதின்னு போலீஸ் புடிக்கப் போறாங்க!
சினிமா விரும்பி
Tamil gossip assured! May stumble upon some quality writing occasionally! ஊர் வம்பு நிச்சயம் உண்டு! சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு!
Thursday, June 30, 2011
Subscribe to:
Comments (Atom)
கோமுப்பாட்டி
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...
-
பாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன்! முடிவுகள் கீழே!: தேடிச் சோறு நிதந் தின்ற...
-
நா. முத்துகுமார் நாற்பத்தோராயிரம் பாடல் எழுத வேண்டியவன் நீ! நாற்பத்தொன்றில் அநியாயமாய்ப் போய்ச் சேர்ந்தாயே! சினிமா விரும்பி
-
After all the hype, when you go with the expectation that Maniratnam is going to view ‘Ramayan’ from a totally fresh perspective , what you...