Wednesday, July 17, 2013

தேடிச் சோறு நிதந் தின்று!



பாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன்! முடிவுகள் கீழே!:

தேடிச் சோறு நிதந் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து -மனம்

வாடித் துன்ப மிக உழன்று - நரை

கூடிக் கிழப் பருவ மெய்திக் - கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

மகாகவி சுப்ரமணிய பாரதி

Oh! Maa Shakti!

Did you think I will also perish like many of those silly folks

who hunt around for their daily food,

indulge in lots of petty gossip,

cause harm to others by their actions,

undergo mental agony themselves,

develop grey hair and grow old and

subsequently become fodder to the cruel Yama?

Mahakavi Subramania Bharati


Monday, April 22, 2013

குதுப் மினார்- சில புகைப்படங்கள்



தில்லியில் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் குதுப் மினாரை அவசரமில்லாமல் அமைதியாகப் பார்த்ததில்லையே என்ற ஆதங்கம் பல வருடங்களாக இருந்தது. போன சனிக்கிழமை அதற்கான நேரம் வாய்த்தது.

நிதானமாக , ஆற அமர, ஒவ்வோர் தூணையும் ரசித்துப் பார்க்க முடிந்தது. மொபைலில் பற்பல புகைப் படங்களையும் எடுத்தேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

சினிமா விரும்பி

Wednesday, March 6, 2013

சுஜாதாவைச் சந்தித்தேன்!



பிப்ரவரி 27 அமரர் சுஜாதாவின் நினைவு நாள்.

பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுஜாதாவின் அசுர ரசிகன் நான்!

ஜம்ஷெட்பூரில் சில காலம் பணி புரிந்த போது நண்பர்கள் சொல்வார்கள்: "சுஜாதாவே அசந்து விடுவார்டா, இப்படி ஒரு வெறியன் இருப்பதைப் பார்த்து!"

1993 இல் தில்லியில் 'ஸ்கோப்' வளாகத்தில் எங்கள் அலுவலகத்தின் கீழேதான் ஆறாவது மாடியில் BEL தில்லி அலுவலகம் இருந்தது. ஒரு நாள் லிப்ட் திறக்கும் போது உள்ளே பார்த்தால் BEL மணல் நிற சீருடை அணிந்த ஐந்தாறு பேர் ( ஓரிருவர் தமிழரல்லாதோர் போல் தோன்றியது). நடு நாயகமாக ஒருவர், சுஜாதாவின் பாஸ் போல. பக்கத்தில் மிக உயரமாஆஆஆஆஆஆஆஆன சுஜாதா! ஜிலீர் என்று நாக்குக்கடியில் ஷாக் அடித்தாற்போல் இருந்தது! பாஸ் சுஜாதாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார் "Sometime back, I read an article in 'Manjari''என்று.

தரைத்தளத்தில் இறங்கி அவர்களுடன் கூடவே 'தேனா வங்கி' வாசலில் நிறுத்தப் பட்டிருந்த வெள்ளை நிற அம்பாஸடர் வரை போனேன்.

"சார் நீங்கள் எழுத்தாளர் சுஜாதாதானே?"

"தான்".

என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டேன். பிரபல நாடகாசிரியரான என் சித்தப்பா பெயரையும் சொன்னேன். ''அவரை நல்லாத் தெரியுமே எனக்கு" என்றார்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நானே BEL அலுவலகம் போனேன் . புதுவரவுகளின் நேர்முகத் தேர்வுக்காக பெங்களூரிலிருந்து இரண்டு நாள் பயணமாக வந்திருக்கிறார் என்று அறிந்தேன். அவருடைய தில்லி (பெங்காலி) உதவியாளருக்கு ஒரே ஆச்சரியம்!

"தமிழ்நாட்டில் சிவாஜி, எம்ஜியாருக்குப் பிறகு இவர்தான் பிரபலம் என்பார்கள். நீங்கள் அதை நிரூபிக்கிறீர்களே! அவரை எப்படி அடையாளம் கண்டீர்கள்?"

"என்னப்பா இது? நாங்கள் பார்க்காத சுஜாதா போட்டோவா!" .

சுஜாதாவை அறைக்குள் போய்ப் பார்த்து மறு நாள் மதியம் அப்பாயிண்ட்மென்ட் வங்கிக் கொண்டேன். ஆனால் இரண்டாம் நாள் இண்டர்வியூ சீக்கிரமே முடிந்து விட அவர் கிளம்பிப் போய் விட்டார். கன்னாட் ப்ளேசில் அவர் அண்ணன் MTNL உயர் அதிகாரி திரு ராஜகோபாலனிட்ம் பேசப் போயிருக்கிறார் என்று அறிந்தேன். டைரக்டரியில் அவர் P&T (அந்தக் காலத்தில் மொபைல் எல்லாம் ஏது?!) நம்பரைத்தேடிப் பேசியதில் " யாரோ உன் வாசகராம் "என்று சுஜாதாவிடம் கொடுத்தார் அவர். எனக்குக் கொடுத்த அப்பாயிண்ட்மென்டைத் தவற விட்டதற்கு வருந்தினார். அடுத்த முறை சந்திப்போமே என்றார். கடைசி வரை அந்த அடுத்த முறை வரவேயில்லை! சில நாட்களிலேயே BEL இல் இருந்து பணி மூப்பு அடைந்து சென்னை வாசியாக மாறி விட்டார்.

அதன் பிறகு 'அம்பலம்' இணைய இதழில் தவறாமல் எழுதுவார். ஓரிரு முறை என்னுடைய ஈ மெயில் கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார்.

மிகப் பெரிய பில்ட் அப்புக்குப் பிறகு வெறும் ஆன்டி கிளைமாக்ஸாக முடிந்து விட்டாலும் , என்னால் என்றுமே மறக்க முடியாத ஒரு வி.ஐ.பி. சந்திப்பு இது! கிட்டத் தட்ட ஒரு மாதம் வரை இந்தக் கதையைச் சொல்லி நண்பர்களிடம் மொக்கைப் பட்டம் வாங்கிக் கொண்டிருந்தேன்!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...