பள்ளி நாட்களில் மேற்கு மாம்பலம் லேக் வியூ ரோடில் ‘Dr CNA பரிமளம் MBBS’ என்ற போர்டு தொங்கும் ஒரு எளிமையான கிளினிக்கைப் பார்த்ததுண்டு. டாக்டரை நேரில் பார்க்கா விட்டாலும் ‘அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனுக்கு இவ்வளவு ஆடம்பரமற்ற கிளினிக்கா?’ என்று நானும் நண்பர்களும் வியந்ததுண்டு. சமீபத்தில் , முதுமையில் , நோயின் உபாதை தாங்க முடியாமல் அவர் தன் வீட்டுக் கிணற்றில் விழுந்து உயிர் நீத்தார் என்று படித்த போது மனம் வலித்தது. நிச்சயமாக வறுமை ஒரு காரணமே இல்லை என்றாலும் MGR இன் ‘நேற்று இன்று நாளை’ படத்தில் வரும் ‘ தம்பீ நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று.. ‘ பாடல் நினைவுக்கு வந்தது:
‘நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்;
பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணாயிருந்தார்;
ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தார்;
தம் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையைத் தந்தார்! ‘
சினிமா விரும்பி
Tamil gossip assured! May stumble upon some quality writing occasionally! ஊர் வம்பு நிச்சயம் உண்டு! சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
கோமுப்பாட்டி
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...
-
பாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன்! முடிவுகள் கீழே!: தேடிச் சோறு நிதந் தின்ற...
-
நா. முத்துகுமார் நாற்பத்தோராயிரம் பாடல் எழுத வேண்டியவன் நீ! நாற்பத்தொன்றில் அநியாயமாய்ப் போய்ச் சேர்ந்தாயே! சினிமா விரும்பி
-
After all the hype, when you go with the expectation that Maniratnam is going to view ‘Ramayan’ from a totally fresh perspective , what you...
No comments:
Post a Comment