முன்பொரு முறை குமுதத்தில் படித்தது:
கவிக்கோ அப்துல் ரஹ்மான் திரைப் படப் பாடல் எழுதுவதில் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை. நண்பர் ஒருவர் ' உங்கள் பாடல் சிதைக்கப் படாது' என்று உறுதியளித்து இரண்டு பாடல்கள் அவரை வலுக் கட்டாயமாக எழுத வைத்தார் . முதல் பாடல் ' என்னடி கோபமா? உன் பக்தனுக்கு நீ தருவதென்ன சாபமா? 'என்று துவங்கியது. மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன திரை உலகில் இது முற்றிலும் புரட்சிகரமானது. சவுண்ட் என்ஜினீயர் உடனே சொன்னார் ' என்ன சார்? முதல் பாட்டிலேயே சாபம், கீபம் என்றெல்லாம் வருது!' கவிஞர் பட்டென்று பதிலளித்தார் ' அப்படியானால் இரண்டாவது பாட்டை முதலில் ரெகார்ட் பண்ணுங்க' . விசித்திரத்திலும் விசித்திரம், அந்தப் படம் கடைசியில் வெளி வரவே இல்லை! இப்போது சொல்லுங்கள் இது மூட நம்பிக்கையா இல்லையா?
சினிமா விரும்பி
Tamil gossip assured! May stumble upon some quality writing occasionally! ஊர் வம்பு நிச்சயம் உண்டு! சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
கோமுப்பாட்டி
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...
-
கடந்த மூன்றாண்டுகளில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதிலும் , இந்த BPO எனப்படும் கால் சென்டர் விஷயத்தில் மத்திய சுகாதார ...
-
"நான் ஒரு விளையாட்டு பொம்மையா?" 1985-87 இல் நான் பரீதாபாதில் பணியில் இருந்த போது மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன...
No comments:
Post a Comment